
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள குரூஸ் கப்பலில் photographer வேலைக்காக நானும் எனது நண்பர் சரவணனும் தி.நகரில் உள்ள கிளை அலுவலகத்திட்க்குச் சென்றோம். அந்த நிறுவனத்தின் மேலாளர் நாங்கள் எடுத்த புகைப் படங்களைப் பார்த்து விட்டு "உங்கள் புகைப்படங்கள் இந்தியாவை, ஒரு poor country-ன்னு சொல்லற மாதிரி இருக்கு" என்று நிராகரித்து விட்டார்.
இந்த நிகழ்வை மறந்து போன ஒரு நாளில் பாண்டிச்சேரி, சிதம்பரம், தரங்கம்பாடி, காரைக்கால், திருநள்ளார், நாகூர், வேளாங்கண்ணி, தஞ்சை மற்றும் மதுரை என்று நானும் நண்பரும் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தோம். வழக்கம் போல் இல்லாமல் இந்தமுறை கோவில், கோவிலாக சுற்றிக்கொண்டிருந்தோம். பாண்டிச்சேரியைத் தவிர.
இந்த ஊர் சுற்றலின் போது எனக்கு இரண்டு விஷயங்கள் தெளிவானது. ஓன்று நம்முடைய தெய்வ நம்பிக்கைகளைப் பற்றியது. இதனை இங்கே பேச இயலாது. சர்ச்சைக்குரியதாக மாறிவிடும்.
இன்னொன்று, பல்வேறு வகையான நில அமைப்புக்களை சார்ந்து வாழும் மக்க்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றியது. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லச் செல்ல அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள், வாழும் முறை, பழக்க வழக்கங்கள், வட்டார மொழி என்று மாற்றங்களின் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருந்தது.
சென்ற இடங்களில் எல்லாம் மாறாமல் இருந்தது குடிநீர் பிரச்சனைகளும், நீக்கமற நிறைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் தான்.
எங்கு பார்த்தாலும் சுகாதாரமற்ற குடிநீரே கிடைத்தது. இது ஒரு விதமான வாழ்வாதார பிரச்சனை என்றால் இனொரு புறம் பிச்சைக்காரர்கள். கோவில்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் அதனை இடங்களிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்களும், வயோதிகர்களும், உழைக்க மறந்தவர்களும் பிச்சைக்காரர்களாக சுற்றிதிரிந்தனர்.
வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள கேசட் கடைகளில் பக்தி பாடல்களும், நமீதா க்ளாமர் பாடல்களும் ஒரே கடைகளில் சூடு பறக்க விற்பனையானது. தஞ்சை பெரிய கோவிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள், வெளிநாட்டினரை விரட்டி விரட்டி பிச்சை எடுத்தனர். இதற்க்கு ஒரு படி மேலே இருந்தது நாகூர் தர்ஹா. மசூதி முழுக்க மன நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்க்கும் ஒரு சமூகத்தில், மூத்திரம் பெய்ய இரண்டு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் குடிநீர் 15 ரூபாய்க்கு விற்கபடுகிறது.
இன்றைய சூழலில் "இந்தியா முழுக்க 4 மில்லியன் மக்கள் ரத்தக் கொதிப்பு நோயாலும், 10 மில்லியன் மக்கள் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
'உலகம் முழுவதிலும் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வாழக்கூடிய மக்களில் 80% பேர் இந்தியர்கள்' என ஐ.நா அறிக்கை விடுகிறது. தினமும் 4 மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது. (இந்த அழகில் வல்லரசு கனவு வேறு.)
இப்படியாக வயிற்றுப்பாட்டிட்க்கே அலையும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தையும், குஷ்பூ, நமீதாவின் பெருத்த ......களைக் கொண்டாடி கோவில் எழுப்பியும், எழுப்ப முயற்சி செய்துகொண்டிருக்கும் சிந்தனை வறட்சி கொண்டவர்களையும்; வறுமையும், ரோகமும், ஊழலும், பொய்யும், புரட்டும், கொலையும், கற்பழிப்பும் தேசிய அடையாளமாகக் கொண்ட ஒரு நாடு 'poor country' இல்லையா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. உங்களுக்கு?