Friday, November 27, 2009

கொடுங் கோடையில்!


தார் ஒழுகும் சாலையில்
பாதத்தின் ரேகைகள்...

வெயிலைக் கிழித்து
கிளை தேடும் பறவைகள்.
கிறங்கித் திரியும்
கால் நடைகள்.

இலைகள் உதிர்த்து
மெளனித்திருக்கும்
வேம்பு.
சில் வண்டுகளற்றுப் போன
நகர வீதியில்
தியானத்தை
உடைக்கும் பேருந்து.

காற்று இல்லாத
கட்டிடக் காடுகளுக்கிடையே
கனவுகள் நிரம்பிய
உறக்கத்தில்
எவ்வளவு ஓடியும்
கண்களன்றி
கைகளால்
பிடிக்க முடிந்ததில்லை
கானலை!

2 comments: