Monday, December 22, 2008

ஒரு கோப்பை மதுவும், விடுதலைக்கான வழியும்!

இறுக்கம் தளர்ந்து
கண்கள் பணிகின்றன

சூழ்ந்தவை யாவும்
நீர்க்குமிழ்களைப் போல
காணாமல் போகின்றன

போகிற போக்கில்
போய்விட்டால்
வலி ஏதுமில்லை

வளைக்கிற போதெல்லாம்
வளைய மறுக்கிறது
மனதும், உடம்பும்

மன்றாடினாலும்
காதுக்குக் கேட்பது
மனதுக்குக் கேட்பதில்லை

மனம் தூங்கிவிட்டால்
துக்கமேதுமில்லை

இருப்பதால் தான்
எல்லாம்.
இல்லாமல் போய்விட்டால்...

அதற்க்காகத்தான்
கொஞ்சம்
கொஞ்சமாக
ஓன்று
இரண்டு என்று
பல அவுன்ஸ்களாய்
பிராந்திப் புட்டிக்குள்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்










ஓருலகம் உடைந்து
சில்லுச் சில்லாய்
சிதறிக் கிடைக்கிறது

எந்தப் பிரங்கையுமற்று
கண்கள்
தூக்கதிட்க்காக ஏங்குகின்றன.

Saturday, December 20, 2008

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகும்- பாகம்2

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
நேர்பட பேசு
குற்றென நிமிர்ந்துநில்
தாழ்ந்து நடவேல்
தீயோர்க் கஞ்சேல்
ரவுத்திரம் பழகு
_ மகாகவி சுப்பிரமணியபாரதியார்.

'ராஜிவை விடுதலைப் புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகிறார்கள். அவர்கள் தீவிரவாதி என்கிறார்கள். ஒட்டு மொத தமிழ் இனத்தையே அழிப்பதட்க்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு லட்சம்பேரை அனுப்பினார் ராஜிவ்; இது சர்வதேச தீவிரவாதமில்லையா? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம் -சீமான்.

ஒரு தேசத் தலைவரின் கொலைக்காக தமிழ் இனத்தையே அழிக்கத் துணை போவதில் எந்த நியாயமும் இல்லை. சீமான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. உண்மையச் சொன்னால் காங்கிரசுக்கு வலிக்கிறதா?

சீமான், தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்றால், காங்கிரஸ்காரர்கள் சீமானின் காரைக் கொழுத்தியது சுத்த அயோக்கியத்தனம்!


தினமலர் பத்திரிக்கையைப் பொறுத்த வரையில், தன் அரிப்பிற்கு யாரையாவது சொறிய வேண்டும். 18.12.08 அன்றைய தினமலரின் தலைப்புச் செய்தி: சீமான் கைது ஆவாரா? என்பது. தமிழ் உணர்வாளர்களை, கலகக்காரர்களாக அடையாளப் படுத்துவதில் யாருக்கு லாபம்? தினமலர் காசுக்கு 'பீ' தின்பதை நிறுத்த வேண்டும்.

பாவம். தினகரன் பத்திரிக்கைக்கு 'சீமான் காரை கொழுத்தியது யார்?' என்றே தெரியாது. 20.12.08 அன்று 'காரை கொழுத்திய மர்ம ஆசாமிகள்' என்று எழுதுகிறார்கள். தொலையட்டும்.

தேர்தலுக்காக பெட்டியை மாற்றிக் கொண்டும், கூட்டணி வைத்துக் கொண்டும், மரியாதை தெரியாமல் பேசும் ஜெயலலிதா போன்ற தேசத்துரோகிகள், விடுதலைப் புலிகளை வார்த்தைக்கு வார்த்தை 'தீவிரவாதிகள்' என்று தூற்றுகிறார்கள். கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்காக மாரடிப்பவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது. முடியவே முடியாது.

ஈழப் பிரச்சனையில் விஜயகாந்தின் கருத்தைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அவரின் பிதற்றல்களை எல்லாம் விகடன் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிடுகிறது. நாட்டின் சாபக்கேடு.

சினிமா கூட்டத்தில் பேசி கைது ஆனால் தான் நடிகர்கள் எல்லாம் போராடுவார்களா? உணர்ச்சிவயப்பட்ட தமிழன் என தனக்குத்தானே போலிச் சயாங்களைப் பூசிக்கொண்டு அலையும் புரட்சிதமிழன் சத்தியராஜ் எங்கே போனார்? தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்து அரசியல் கணக்குப் போட்ட 'ஒன்டிப்புலி' விஜய் எங்கே போனார்? யோசியுங்கள்!

காது கேளாதவர்கள் அல்லது காது கேளாது போல் நடிப்பவர்களுக்கு:

1) மக்களுக்க்காகதான் அரசாங்கம்.
2) கொள்கைக்காக போராடுபவர்களை, பணத்திற்க்கு மாரடிப்பவர்கள் ஒருபோதும் வெல்ல முடியாது.
3) பிரதமர் மன்மோகன்சிங் தலைமைக்கு டப்பிங் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
4) ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கைத்துறை பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
5) அடிப்படை பேச்சுரிமைச் சட்டம் அமலுக்கு வரவேண்டும்.
6) இல்லையென்றால் இந்தியாவை 'பாசிச' நாடு என்றழைக்க உரிமை கொடுங்கள்.

Friday, December 12, 2008

சென்னைக்கு வந்து போனவர்கள் சொன்னது...


இந்த நகரத்திற்க்கு
வந்து போனவர்களெல்லாம்
என்னிடம்
சிலாகித்துப் பேசுவதுண்டு

மெரினா கடற்க்கரை
அண்ணா சமாதி
ஸ்பென்சர் பிளாசா
ரங்கநாதன் தெரு
போகவர
நிமிடத்திட்க்கொரு ரயிலென்று

அவர்களுக்கென்ன தெரியும்
வாடகை வீடு
தேடியலைவதிலும்
மின்சார ரயிலின்
தொங்களிலுமே
என் காலம் போன கதை.

Monday, December 8, 2008

நண்பா இந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு!

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்டிக்
நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திப்பெட்டி\சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்க்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-கவிஞர் நகுலன்

2004ம் ஆண்டு கல்லூரி ஹாஸ்டலில் தான் முதன் முறையாக விஜேந்திரனைச் சந்தித்தேன். அப்போது விஜேந்திரன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு என்னன்ன கெட்ட பழக்கம் இருக்கு?" சற்று தடுமாறிய நான் "ரெம்ப பேசுவேன்" என்றேன். மறுத்த விஜேந்திரன் "அது இல்ல தண்ணி, தம் வேற ஏதாவது?" என்று கேட்க, நான் இல்லை என தலையாட்டினேன். அன்று அவன் பார்த்த பார்வைக்கு இன்று தான் அர்த்தம் புரிகிறது.(சரியான 'பழம்' வந்து மாட்டிக்கிட்டான் என்பதே அது)


பின் நாட்களில் ஹாஸ்டல் வார்டன் மற்றும் வாட்ச்மேனிடம் சிக்காமல் சரக்கை பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவருவதில் நான், விஜயின் வலது கரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.(ஒரு 'பாடிகாட்' போல) இதில் கவனிக்க வேண்டிய ஓன்று நாங்கள் ஒரு நாளும் மாட்டிக் கொண்டதில்லை.

விஜயின் விருப்பமான ப்ராண்ட் 'signature' விஸ்கி. கைச் செலவு குறையக் குறைய 'vintage'ஆக மாறி கடைசியில் 'nepoleon'இல் வந்து நிற்கும். 2005 மார்ச் 3ம் தேதி விஜயின் பிறந்த நாள். ஹாஸ்டலின் முதல் மாடியே போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. யாவரும் போதையில் மூழ்கிப் போன பின்னிரவில், " விஜேந்திரன் பிறந்த நாள்னா பசங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கணும்!" என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான், நான் 'யாருக்காவது உதவலாமே?' என்றேன். ( விஜயின் அடுத்த இரண்டு பிறந்த நாளுக்கும் பல்லாவரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்க்கு அரிசி மூட்டைகள் வங்கிக் கொடுத்தான்.)

எனக்குத் தெரிந்து விஜயுடனான மூன்றாண்டுகளில் அவன் குடிக்காமல் இருந்தது, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் மட்டும் தான்.

விஜயின் வகுப்பு நண்பர்களில் ஒரு சிலரைத் தவிர பலரும் ஓசியில் குடிப்பதற்காகவே அவனோடு அலைந்து கொண்டிருந்தனர். ஓசிக் குடியோடு நிறுத்தாமல் அறைகளில் வாந்தி எடுத்து வைப்பதும், நான் சுத்தம் செய்வதுமாக சில விஷயங்களில் விஜயோடு சண்டை போட்டிருக்கிறேன்.'ஓசிக் குடிகளிடம்' நான் எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் எங்கள் அறைக்கு வருவதை நிறுத்தவே இல்லை.

விஜய் ஒரு முறை 'காக்டெயில்' கலக்குவதாகச் சொல்லி பிராந்தி+விஸ்கி+ஒயின்+பழச்சாறு+உப்பு என எல்லாவற்றையும் கலந்து கொடுக்க அறையில் உள்ள எல்லோரும் வாந்தியும், பேதியுமாக அலைந்தது போன்ற சம்பவங்களும் உண்டு.

குடித்து விட்டு போதையில் விழுந்து கிடப்பவர்களை மட்டுமே பார்த்த எனக்கு, மது அருந்தி விட்டு விஜய்,கோகுல்,வினோத்,பாண்டி என்று யாவரும் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும், வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது, ஆச்சரியத்தை தருவதாகவே இருந்தது.

கோழியின் கால்கள் குப்பையைக் கிளறுவதைப் போல, மது பலருக்கும் வேதனையான நினைவுகளை கிளறிவிடுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் ஏதாவது புலம்புவதும்,வாய் விட்டு அழுவதும், விழுந்தடித்து தூங்கிவிடுவதுமாக அமைந்து விடுகிறது. ஆனால், விஜயைப் பொறுத்த வரை 'மது' என்பது கண்ணுக்குத் தெரியாத உற்சாகத்தை கொணரும் ஒரு மாயத் திரவமாகவே இருந்து வந்தது. அதை பல நேரங்களில் நான் நேரடியாகவே பாத்திருக்கிறேன்.

விஜய் குடிப்பதோடு மட்டுமே நிறுத்தி விடாமல் படிப்பிலும் சிறந்து விளங்கினான். சென்னையில் B.com., முடித்தான். சிங்கப்பூரில் M.B.A., முடித்து விட்டு தற்போது அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான். இப்போது குடிப்பதில்லயாம்!? நம்புகிறோம்!

விஜய் தன்னையும் அறியாமல் ஒரு பழமொழியைப் பின் பற்றியிருக்கிறான்.'களவும் கற்று மாற' என்பதே அது.

இவை எல்லாம் நேற்று நடந்ததைப் போலவே இருக்கிறது. ஆனால், காலம் நமக்கு மிச்சம் வைப்பது வெறும் நினைவுகளை மட்டும் தான். அந்த நினைவில் விஜயின் உற்சாகமும், பிராந்தி கிளாசின் மனமும் நிறைந்திருக்கிறது. நினைவில் அமிழ்ந்து போவது போல சுகம் எதுவும் உன்ன்டா இந்த உலகில்?