Wednesday, April 22, 2009

உலகப் பொருளாதாரத்தின் பெரும் சரிவிட்க்குப் பின்...

உலகப் பொருளாதாரத்தின்
பெரும் சரிவிட்க்குப் பின்...

பலர்
வேலையிழந்து வருந்துகின்றனர்
சிலர்
இருக்கும் வேலையை இறுகப் பிடித்தபடி
காலத்தைக் கடத்துகின்றனர்

உண்டும், உண்ணாமலும்
பொருள் தேடியலையும்
ஒரு கூட்டத்தையே
தனிமை வியாபித்திருக்கிறது

நண்பர்கள் கூடி
சிரித்துப் பேசிக் கொள்வது கூட
அதிகப் படியான ஒன்றாக
மாறிப்போயிருக்கிறது

உலகப் பொருளாதாரத்தின்
பெரும் சரிவிட்க்குப் பின்...

அமைதியின்மை துரத்த...
வாழ இயலாத வாழ்கையில்
ஓட முடியாத ஓட்டப்பந்தயத்தின்
இடையிடையே...

"ஒரு வாய் சாப்பிட்டுப் போடா" என்று
சொல்பவளாக
அம்மா மட்டுமே இருக்கிறாள்!..

Thursday, April 16, 2009

விரைவில் உங்கள் பார்வைக்கு...

விளம்பரங்களைத் தேடியலையும் இன்றைய பத்திரிக்கைச் சூழலில், நண்பர்கள் ஒன்றிணைந்து தரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சிறந்ததொரு சிற்றிதழை தங்களுக்கு வழங்க உள்ளோம். எக்காரணம் கொண்டும் எழுத்தின் தரம் குறைந்து விடக் கூடாது என்ற காரணத்தால் காலாண்டிதழாக மலர உள்ளது. நுண் அரசியல், நுண் இலக்கியம் மற்றும் நுண் சினிமா என ஆழ்ந்த பதிவுகளைக் கொண்டது. விரைவில் வெளிவர உள்ள இந்த சிற்றிதழின் முன் அட்டைப் பக்கம் உங்கள் பார்வைக்கு...

Saturday, April 11, 2009

கார்த்திக் அனிதா - கொலை வெறித் தாக்குதல்!

நேற்று கார்த்திக் அனிதா திரைப்படத்தை பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தேன். சரி, புது டைரக்டர் ஏதாவது பாக்கற மாதிரியாவது படம் இருக்கும்னு நினச்சு போன எனக்கு.... வேறு மாதிரியான அனுபவம் காத்திருந்து.

வேலைக்கே ஆகாத படமென்று முதல் பத்து நிமிடத்திலேயே தெரிந்து விட்டது. சீரியல் டைப் மேக்கிங். அதிலும் ஹீரோ, ஹீரோயின் பழி வாங்கும் படலம். உண்மையாவே முடியல டைரக்டர் சார்...

சில படங்கள் எல்லாம் உட்கார முடியாத அளவிற்க்கு சோதித்தால் யோசிக்காம வெளிய எழுந்து வந்து விடுவேன். அப்படி எழுந்து வந்த கடைசிப் படம் படிக்காதவன். அந்த படத்தைப் பத்தி இப்போது பேச வேண்டாம் என நினைக்கிறறேன். எல்லாம் என்னோட நல்லதுக்குத் தான். ஏன்னா ரத்தக் கொதிப்பு வந்திரக் கூடாதில்ல...

ஆனா கார்த்திக் அனிதா படம் எரிச்சல் வரமாதிரியெல்லாம் இல்லை. இது வேற டைப். அதாவது அவங்க சீரியசா நடிப்பாங்க ஆனா நம்ம சிருச்சுக்கிட்டே இருப்போம். ரெம்ம்ப பொறுமையா உட்கார்ந்து இடைவேளை பார்த்து விட்டேன். அதற்க்கு அப்புறம் பார்த்தால் பாதி திரைஅரங்கு காலியாகி விட்டது.

நான் பார்த்த படத்திலேயே இந்த படத்தின் தீம் பாடலுக்கு தான் ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னொரு கொடுமை என்னன்னா ஸ்ரீவித்யா போட்டோவ இந்த படத்தில், இறந்து போன ஹீரோவின் அம்மாவா காட்டிஇருக்கிறார்கள். ('செத்தும் விட மாட்டிங்களான்னு' ஆங்காகே ஆடியன்ஸ் குரல்கள்) படத்தின் ஒரே ஆறுதல் மனோகரின் காமெடி மற்றும் சிங்கமுத்துவின் காமெடி. லொள்ளுசபா மனோகர் உண்மையிலேயே பின்னிட்டார்.

அப்புறம் கதைஎன்னன்னா.... கதை என்னன்னா... சத்தியமா தெரியல சார். 'neighbourhood love' ன்னு போஸ்டர்ல போட்ட்ருந்தாங்க, அதே மாதிரி கதை என்னன்னு போட்டாங்கன்னா ரெம்ப சவ்ரியமா இருக்கும். ஹீரோயின் மேக் அப். பார்க்க முடியலங்க... ஹீரோயினுக்கு ஜோதிகானு நெனப்பு. ஹீரோவின் நிலைமை பரிதாபம். கூட்டத்தில் தொலைந்த குழந்தை மாதிரி வந்து போகிறார்.

ரயில்வே ஸ்டேஷன் ஐ பார்த்திருப்பீர்களே அதைப் போல ஆடியன்ஸ் திரைஅரங்கினுள் பதட்டத்துடன் அலைந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ரத்தினச் சுருக்காமாக சொல்ல வேண்டுமானால் கார்த்திக் அனிதா படம் ஒரு நவீன கொலைவெறித் தாக்குதல் என்றே சொல்வேன்.

Wednesday, April 8, 2009

மரியாதை ட்ரைலர்: விமர்சனம்!!!

இரண்டு நாட்களிக்கு முன்பாக ரிமோட்டை வைத்துக் கொண்டு எந்த சேனலை பார்ப்பது எனத் தெரியாமல் மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்போது ராஜ் டி.வி யில் 2000 ல் என டைட்டில் போட்டார்கள். ரிமோட்டை கீழே இறக்கி விட்டு அதை பார்க்க ஆரம்பித்தேன். 'வானத்தைப் போல' படத்தின் ட்ரைலர் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென பார்த்தால் 2009 என ஆரம்பித்து "மரியாதை" ட்ரைலர் ஓட ஆரம்பித்தது. விஜயகாந்த் கருப்பா பயங்கரமாக நடந்து வந்தார். கூடவே அம்பிகாவும் (அகலமாக) நடந்து வந்தார். ஒரு பக்கம் மகன் விஜயகாந்த் (வெளிநாட்டில் ஆர்டர் செய்து வாங்கிய) விக்குடன் மிக நீண்ட....... 'மிக நீண்ட' என்றால் ஒரு பஸ் நீளத்துக்கு??? விசிறி!!! செய்து அப்பா விஜயகாந்துக்கு காற்று வீசி விட்டுக் கொண்டிருக்கிறார்.(அடேகப்பா)

மகன் விஜய்கந்துக்கே வெளிநாட்டில் ஆர்டர் செய்து வாங்கிய விக்கென்றால், அப்பா விஜயகாந்த் என்றால் சும்மாவா? ஒரு கனமான மீசை ("கிடாய் மீசை" என்று எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க) அதில் பொங்கலுக்கு அடிக்கும் சுண்ணாம்பு கொஞ்சம் அடித்திருந்தார்கள். ஆதாவது வயதான தோற்றத்தில் நடிக்கிறாராம்???? விஜயகாந்த்...


இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. படத்தில் எம்.ஜி.ஆர் பாடல்(remix) வருகிறது. காண கண் கோடி வேண்டுமென்பார்களே, அதைப் போல எல்லாம் இல்லை. அந்த பாடலைப் பார்ப்பதற்கு பதிலாக நான் கடவுள் அம்சவல்லி போல கண் பார்வை இல்லாமல் போனாலும் சந்தோசமே...

பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா மதுரை திருமலை நாயக்கர் மஹால் தூணைச் சுற்றிவந்து ஆடுவாரே, அதைப் போல மீரா ஜாஸ்மீன் விஜயகாந்தை சுற்றி வந்து ஆடுகிறார். விரைவில்....(அவஸ்தைகள்) என்று திகில் படம் பார்த்த உணர்வோடு அந்த ட்ரைலர் முடிகிறது... விடாது கருப்பு!!.........