Sunday, November 30, 2008

தரமான படம் பார்க்க விரும்புகிறவர்கள் மட்டும் வரட்டும்!

'தங்கராசு மாமா, தங்கராசு மாமா' என்று ஒவ்வொரு நொடியும் உருகும் 'மாரியாயி' என்ற தூய ஆத்மாவின் கதை தான் 'பூ'.

எழுத்தாளர் ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போயி' என்ற சிறுகதை, இயக்குனர் சசியால் 'பூ'வாக மலர்ந்திருக்கிறது. திலகவதி i.p.s அவர்களால் ச.தமிழ்செல்வனின் சிறந்த பத்து கதைகள் 'முத்துக்கள் பத்து' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது (விலை-ரூ40). அதில் முதல் கதையாக இந்த 'வெயிலோடு போயி' அமைந்துள்ளது. அதை நான் படித்தபோது உண்டான உணர்வு, எவ்வளவு தூரம் திரையில் சாத்தியமாகும் என்ற கவலை இருந்தது. ஆனால் 'பூ' திரைப்படத்தைப் பார்த்தபோது கதை, கவிதையாக மாறி அதில் மாரியாயி(பார்வதி) உயிரூட்டப்பட்ட பிம்பமாக அலைந்து கொண்டிருந்தாள்.

நண்பர்களே முடிந்தால் நீங்கள் சிறுகதையைப் படித்துவிட்டு திரைப்படத்தைப் பாருங்கள். அந்த சிறுகதை உங்களுக்குள் உருவாக்கும் பிம்பம் மிகவும் அற்புதமான தோற்றம் கொண்டது.



ஒரு திரைப்படத்தை அணுகும் முறை அல்லது படம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை:

1) முதலில் திரைப்படத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பாருங்கள்.
2)திரைக்கதையில் ஏதேனும் குளறுபடி இருந்தால் மட்டும் விவாதம் செய்யுங்கள். மற்றபடி உங்கள் கருத்துக்கு திரைப்படத்தை வளைக்கப் பார்க்காதீர்கள்.
3)படம் 'slow'வாக இருக்கிறது என்ற மோசமான மனநிலையைத் தூக்கி எறியுங்கள்.
4)'திரைப்படத்தின் வேகத்தை திரைக்கதைதான் நிர்ணயம் செய்யும்; நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
5)திரைப்படத்தின் எல்லைகளை தீர்மானிப்பது கதையும், திரைக்கதையும் தான்.
6)இந்த செய்திகள் தரமான சினிமாவிற்க்கு மட்டுமே பொருந்தும். தரமான சினிமா எதுவென்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் 'பூ'.

மேற்கொண்டு 'பூ' திரைப்படத்தைப் பற்றி நிறைய பேச விரும்பவில்லை. அந்த அற்புதத்தை நீங்கள் நேரடியாக சென்று உணருங்கள். அதுதான் ஒரு நல்ல திரைப்படத்திட்க்கு நாம் கொடுக்கும் மரியாதை.

'தெனாவட்டு' போன்ற மட்டரகமான படங்களையெல்லாம் சன் டி.வி, சூரியன் fm, குங்குமம் மற்றும் தினகரன் போன்ற ஊடகங்கள் மிகையான விளம்பரங்களைக் கொடுத்து நமக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஆனால், நல்ல திரைப்படங்களைப் பற்றி யாரவது நான்கு பேர் தான் பேசுகிறார்கள். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். அப்போது தான் தரமான சினிமாவிற்க்கு தரமான ரசிகர்கள் கிடைப்பார்கள். 'பூ' திரைப்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். ஆரோக்கியமான விவாதங்களைத் தொடரலாம்.

5 comments:

Unknown said...

அன்புள்ள த.கிருஷ்ணமூர்த்தி,

படம் பார்க்கத்தூண்டுகிறது உங்கள் ரசனை.

இங்கு சொல்ல வந்தது 'என்னத்த' கன்னையாவைப்பற்றி அவருக்கு "என்னத்த' கன்னையா என்ற பெயர் 1964ல் வந்த "நான்" என்ற படத்தின் மூலம் வந்தது .அதில்தான்
"என்னத்த...சொல்லி.,என்னத்த.
பண்றது" வசனம் வரும்.

என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.

ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
எல்லாம் உண்டு.

"மீண்டும் ஒரு காதல் கதை" சினிமா தலைப்பில் இன்று ஒரு கதை.

சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.

மன்னிக்க. மேல் உள்ள கமெண்டை
தவறுதலாக உங்கள் கவிதைப் பதிவிலும் போட்டு விட்டேன்.

அன்புடன்
கே .ரவிஷங்கர்

4Tamilmedia said...

மிக நல்ல கருத்துக்கள்

பாபு said...

நல்ல திரைப்படங்களைப் பற்றி யாரவது நான்கு பேர் தான் பேசுகிறார்கள். நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள்"

நல்ல கருத்து
நீங்கள் சொன்ன மாதிரி, நல்ல சினிமாக்களை நிறைய பேர் மெதுவாக போகிறது என்ற ஒரே வார்த்தையில் காலி பண்ணி விடுகிறார்கள்

Anonymous said...

entha poo padam USA-vil enkee parkalam?

கிரி said...

//திரைப்படத்தின் வேகத்தை திரைக்கதைதான் நிர்ணயம் செய்யும்; நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்//

சரியா சொன்னீங்க..