Wednesday, April 22, 2009

உலகப் பொருளாதாரத்தின் பெரும் சரிவிட்க்குப் பின்...

உலகப் பொருளாதாரத்தின்
பெரும் சரிவிட்க்குப் பின்...

பலர்
வேலையிழந்து வருந்துகின்றனர்
சிலர்
இருக்கும் வேலையை இறுகப் பிடித்தபடி
காலத்தைக் கடத்துகின்றனர்

உண்டும், உண்ணாமலும்
பொருள் தேடியலையும்
ஒரு கூட்டத்தையே
தனிமை வியாபித்திருக்கிறது

நண்பர்கள் கூடி
சிரித்துப் பேசிக் கொள்வது கூட
அதிகப் படியான ஒன்றாக
மாறிப்போயிருக்கிறது

உலகப் பொருளாதாரத்தின்
பெரும் சரிவிட்க்குப் பின்...

அமைதியின்மை துரத்த...
வாழ இயலாத வாழ்கையில்
ஓட முடியாத ஓட்டப்பந்தயத்தின்
இடையிடையே...

"ஒரு வாய் சாப்பிட்டுப் போடா" என்று
சொல்பவளாக
அம்மா மட்டுமே இருக்கிறாள்!..

1 comment:

mahesh said...

gud work da... thats realy true.........