Friday, February 20, 2009

தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா?

எம்.ஜி.ஆர்:
தம்பி கணேசா, இப்ப உள்ள நண்டு சுண்டு நடிகனுக்கெல்லாம் உன்னோட நடிப்ப கொஞ்சமாவது சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? நானும் நடிக்கிறேன் பாருன்னு... ஐயோ அம்மா...

ஏட்டு(அழுதபடியே):
சரியா சொன்னிங்க வாத்தியாரே... நேத்தெல்லாம் ஒரு படம் பாத்தேன்... அதுல்ல நடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனா... அம்மனக்கட்டயா ரோட்டல போட்டு பொச்சுல அடிச்சுக் கொண்ருவேன்.
-நான் கடவுள் பட வசனம்.

'படிக்காதவன்' படம் பார்க்கும் போது எனக்கும் அதே உணர்வு தான் வந்தது.உங்களுக்கும் வந்திருக்கும்.

நான் கடவுள் திரைப்படத்தை மதுரையில்,காரைக்குடியில்,சென்னையில் 2 முறையென்று மொத்தம் 4 முறை பார்த்தேன். படத்தை ஒவொரு முறை பார்க்கும் போதும் திரை அரங்கில் பெண்கள் கூட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. படிக்காதவன்,வில்லு,சிலம்பாட்டம் மாதிரியான ஆகப் பாடாவதி படங்களுக்கெல்லாம் பெண்கள் கூட்டம் குவியும் போது, நான் கடவுள் மாதிரியான மாற்று முயற்சிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காதது மிகுந்த வேதனையாயிருக்கிறது.

நான் கடவுள் பற்றி ரஜினி கூறுகையில்:
'இந்த படத்தைப் பார்த்த பிறகு, நானும் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்க்காக பெருமைப்படுகிறேன்'.

சிம்பு கூறுகையில்:
பாலா மாதிரி கலைஞன் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். தயவு பண்ணி கலைஞனைக் கொண்டாடுங்க.இங்க இருக்கிற யாரையாவது, 'நான் கடவுள்' படத்தின் நாலு ஷாட் கம்போஸ் பண்ணச் சொல்லுங்க. பார்கிறேன்.

தமிழ் சினிமாவில் ரஜினியும்,சிம்புவும் மட்டும் தான் உப்புப் போட்டு சாப்பிடுகிறார்களா? ஏன் சகக் கலைஞனை பாராட்ட யாருக்கும் மானம் வரவில்லை?

'75 வருடங்களாக, 6100 திரைப்படங்களில் (குறிப்பிட்ட சில படங்களைத் தவிர்த்து) நீங்கள் கடை பிடித்து வந்த மட்டரகமான மரபையெல்லாம், பாலா தனது படைப்புச் சுத்தியலால் அடித்து நொறுக்கி விட்டார்' என்ற கோபமா?

'மனநோயாளி(சேது), சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து வந்தவன்(நந்தா), வெட்டியான், லங்கா கட்டை உருட்டுபவன், கஞ்சா விற்பவள்(பிதாமகன்), பிணம் தின்னும் அகோரி சாமியார்கள், பிச்சைக் காரர்கள்(நான் கடவுள்)' என்று தமிழ் சினிமாவின் எல்லைகளை பெரும் அதிர்வுடன் கடந்து சென்றவர் பாலா. மறுப்பதற்கில்லை.

பத்திரிக்கையாளர் ஞானி, நான் கடவுளை 'அராஜகமான படம்' என்று குறிப்பிடுக்கிறார். 'ஈரான்' போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இயக்குனர்கள் மொசான் மாக்மல்பப், மஜீத் மஜிதி ஆகியோர், விளிம்பு நிலை மக்களின் துயர வாழ்க்கையைப் படமாக்கி உலக அளவில் கவனம் பெற்றார்கள். அவர்களையெல்லாம் சிலாகித்துவிட்டு, நம்மவர் பாலா விளிம்பு நிலை மனிதர்களைக் காட்டினால், அராஜகமா? ஞானி அவர்களே தயவு செய்து உளருவதை நிறுத்துங்கள்!

நான் கடவுள் படத்தின் வசனம் ஓன்று...
வயோதிகர்: அழுகாத ராமப்பா. எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துக்கிட்டு இருப்பான்.

ராமப்பா: பாத்துப் புழுதுறான்.. தேவுடியா மகெ...நம்மள மாதிரி ஈனப் பிறவிக்கெல்லாம் சாமியே கிடையாது.(வெடித்து அழுகிறார்)

இது வெறும் கெட்ட வார்த்தையில்லை. உச்சகட்ட வலியில், வெறுமையில், கிளர்ந்தெழுந்த உக்கிரத்தில் வெடித்த 'ரணம்'. அதனால் தான் திரைஅரங்கில் அதனை பலத்த கைதட்டல். கை தட்டிய பலர் குடும்பத்து ஆட்கள் என்பது இங்கே குறிப்பிட பட வேண்டிய ஓன்று.

படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை. நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

9 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சத்தியமான வார்த்தைகள் நண்பா.. எனக்கு படம் பாலாவின் மாற்ற படங்களைப்போல் ஒரு பாதிப்பை உண்டாக்க வில்லை.. ஆனாலும் இது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.. இதை பாலாவைத் தவிர யாரும் எடுக்கவும் முடியாது.. நல்ல பதிவு..

முரளிகண்ணன் said...

100% true

Anonymous said...

உண்மை, உண்மை.

கிரி said...

//நான் கடவுள் மாதிரியான மாற்று முயற்சிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காதது மிகுந்த வேதனையாயிருக்கிறது//

:-(

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Jayanthan said...

neenda idaivelikku piragu, nachunnu oru news, sorry sorry nethiyadi.......

Anonymous said...

வணக்கம் சகா, இததான் எதிர்பார்த்தேன்.நெத்தியடியா சொன்னீங்க பாருங்க.படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை.ன்னு அது உங்க நேர்மைய காட்டுது

Anonymous said...

வணக்கம் சகா, நான் தஞ்சை ஜெமினி இததான் எதிர்பார்த்தேன்.நெத்தியடியா சொன்னீங்க பாருங்க.படம் நல்லாயிருக்கு, நல்லாயில்லை என்பதையெல்லாம் கடந்து 'கடவுளை' தரிசிக்க வேண்டியது ஆரோக்கியமான பார்வையாளனின் கடமை.ன்னு அது உங்க நேர்மைய காட்டுது சார் .

aamaran said...

நண்பரே,

தங்கள் கருத்துகள் நன்றாக உள்ளன. ஆனால் ஒன்றை மட்டும் கவனிக்க தவறி விட்டீர். அது ஏன் நான் கடவுள் அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். அவன் அவன் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் போதாதென்று திரியாரங்குக்கு வேறு சென்று அழவேண்டுமா.

ரஜினி, சிம்புவும் பாராட்டி இருக்கிறார்கள். நல்ல விஷயம் தான், அனால் பராட்டத்தவர்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்கலாம். எதற்கு உதட்டளவில் இனிப்பை வைத்து பொய் சொல்லி ஊரை ஏமாற்ற வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம் அல்லவா. சிலர் படத்தின் தாகத்திலிருந்து விடு படாமலே இருந்திருக்கலாம்.

உப்பு போட்டு சாபிடுராங்களா... ரஜினி உப்பு சேர்த்துகொல்வதில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். கேட்டு இருக்கிறேன். பாலா படம் பிடிக்கும் என்பதை சிலர் ஏதோ ஒரு கவ்ரவமான விஷயமாகவும் ஏதோ certification போல பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் பாதி பேர் சும்மா சொல்லணுமென்று சொல்லுகிறவர்கள். அதே போல எல்லோரும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா.