Wednesday, July 27, 2011

தமிழர்கள் செய்யும் கருணைக் கொலை!

உண்மையைத் தேடுவதே கலையின் நோக்கமாக இருக்கக் கூடும் - ஆந்த்ரே தார்கோவெஸ்கி

கடந்த மாதம் வெளிவந்த ஆரண்ய காண்டம் திரைப்படத்தை சென்னையில் உதயம், pvr , சாந்தி, inox மற்றும் மதுரையில் பிக் சினிமாஸ் என ஐந்து முறை கண்டுகளித்தேன். ஒவொரு முறையும் ஆரண்ய காண்டம் புதிய அனுபவங்களைத் தந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு இந்திய சினிமாவில் மிகச்சிறந்த படங்களின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய படம் ஆரண்ய காண்டம்!

நம்புங்கள் தமிழில் எடுக்கப்பட்ட!!??? ஆரண்ய காண்டம் NEW YORK FESTIVAL -ல் GRAND JURY PRIZE பெற்றுள்ளது! மேலும் உலகின் சிறந்த படங்களை பட்டியலிடும் IMDB வலைத்தளம் கடந்தவாரம் 9.1 வரை அந்த இணையத் தளம் RATING கொடுத்தது. உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களுக்கே 9.4 தான் RATING . என் விருப்பதிட்குரிய இயக்குனர்கள் ஸ்டான்ட்லி குப்ரிக் மற்றும் குரசாவாவின் படங்களுக்கே இந்த இடம் கிடைக்க வில்லை. ஆனால் ஆரண்ய காண்டம் ப்ளாப்!

நமது ஆனந்த விகடன் போக்கிரி, காவலன், மன்மதன் அம்பு போன்ற மட்டரகமான படங்களுக்கு கொடுக்கும் 44 மதிப்பெண்களையே வழங்கியது. காரணம் படத்தின் வன்முறை என்கிறது விகடன். எது வன்முறை? நல்ல படத்துக்கு மார்க் கொடுக்காமல் இருப்பதா? அட்டையில் பொம்பளைப் படத்தைப் போட்டு சம்பாதிப்பதா? COPY அடித்த தெய்வத் திருமகள் படத்திற்கு 50 கொடுப்பதா? தமிழ் நாடு உருப்பெருவதட்க்கு உங்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அறிகுறி ஏதாவது தெரிகிறா? நிச்சயம் தெரியாது. தமிழ் நாட்டில் எப்படி தெரியும்?

இதில் நிறைய "அறிவுஜீவிகள்" 'இதுவரை வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே copy அடிக்கப்பட்டவை' என்று கமென்ட் எழுதுகிறார்கள். 'கமலை'ப் பற்றி நிறைய எழுதியும், "கமல் மட்டு copy அடிக்கவில்லையா?" என சப்பைக் கட்டு காட்டுகின்றனர். யார் திருடினாலும் திருட்டு திருட்டு தான்! இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் திராணி இல்லாத, நெஞ்சில் உண்மையில்லாத, யாரையேனும் அண்டிப் பிழைப்பு நடத்தும், காசுக்காக எதையும் திண்ண தயாராக இருப்பவர்களுக்குமே உரித்தான வார்த்தைகள் இவை. மேலும் குறைந்தபட்ச அறத்தோடு செயல்படுகிரவர்களையும் நம்பிக்கை இழக்கச்செய்யும்!

நண்பர்களே,அற்புத கவிஞன் பாரதியை 39 வயதில் கொன்றோம். அருமையான கதை சொல்லி புதுமைப்பித்தனை 38 வயதில் கொன்றோம். நவீனக் கவிஞன் பிரமிளை புற்று நோய்க்கு தின்னக் கொடுத்தோம். நல்ல படங்களை எடுத்த மகேந்திரனை இன்று எங்கே? அந்த வரிசையில் தான் "ஆரண்யகாண்டம்" இயக்குனரையும், தயாரிப்பாளரையும் சேர்க்கவேண்டும். ஏன் என்றல் அவர்கள் தமிழர்களின் ரசனை புரியாமல் உலகத்தரத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து விட்டார்கள். இப்படியாக கலைஞர்களை தமிழர்களாகிய நாம் கொலை செய்து கொண்டே போனால், தமிழ் நாட்டில் எப்படி கலை வளரும்?

இப்போது சொல்லுங்கள் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டில் சூடு, சுரணையோடு வாழ்ந்தால் ஏன் நமது சமநிலை குலையாது என்று?
.............................

2 comments:

Dines said...

80% of people are coming to theater just to be entertained, so what ever either you copy a film or its your own creation with or without violence it does not matter but people should be interested to see it not to be bored with thats what aranya kandam is and never speak like always hollywood or other country cinemas are best since our culture is much different

Anonymous said...

You are absolutely right!!! This movie was disliked by tail audience who wants Masala BUT this is the movie which need to portraitured for life long...As a result we will miss the Fantastic Director & Producer....We will not improve until our people come out from the Remake & Masala Dust.