Tuesday, August 11, 2009

திருமதி. ஜெயலலிதா - கலைஞர் கருணாநிதி !



நிருபர்: சத்துணவு ஊழியர்கள் தங்களை முழு நேர ஊழியர்களாக்க வேண்டுமென்று நடத்திய போராட்டம் பற்றி?

கலைஞர்: சத்துணவு ஊழியர்கள் பகுதி நேர ஊழியர்கள்தான். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அவர்கள் அந்தப் பணிக்கு வரும் போது, பகுதி நேரம் என்று தெரிந்தே வந்தார்கள்.

அதற்க்குப் பிறகு திருமதி ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் அதற்க்குப் பிறகும் பகுதி நேர ஊழியர்கள் என்ற முறையிலே ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்பொது, பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றுவோம். முழு நேரத்திட்க்காக ஊதியம் வேண்டும் என்று சொன்னால், அது எப்படி பொருத்தமாகும்?

நிருபர்: எல்லோரும் 'செல்வி ஜெயலலிதா' என்று தான் அழைக்கிறார்கள். நீங்கள் 'திருமதி ஜெயலலிதா' என்று சொல்ல்கிறீர்களே?

கலைஞர்: இதை மைனாரிட்டி அரசு என்று அவர் திரும்பத் திரும்ப சொல்கிறாரே, அதை எப்படிச் சொல்கிறார். அவர் அப்படிச் சொல்கிறவரை, நானும் இப்படிதான் சொல்வேன்.
.....................................................................

ஜெயலலிதா ஒரு வலு மிக்க எதிர் கட்சியாக நின்று மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தவறிவிட்டார். இடைத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்த ஜெயலிதா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. எனும் மிகப் பெரிய அஸ்திரத்தை ஒரு கசப்பான முடிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்.


எம்.ஜி.ஆர். தனது சுய சரிதையில் " என்னருகில் யார் வர வேண்டும். என்னைச் சுற்றிலும் யார் இருக்க வேண்டும் என்று ஒரு வட்டம் போட்டுக் கொண்டேன். அந்த வட்டமே எனக்கு சிறையாக அமைந்து விட்டது" என்றார்.

அப்படி ஒரு வட்டத்தை ஜெயலலிதா போட்டுக் கொண்டு வெகு நாட்களாகி விட்டது. அந்த வட்டத்துக்குள் அதிகார மையம் அவரே. அந்த வட்டத்துக்குள் ஒரு விளையாட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வட்டத்துக்குள், அதிகார மையத்தை நெருங்கவோ, நெருங்க நினைக்கவோ ஆசைப்பட்டால் அந்த நபர் விளையாட்டிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார். ஏன்? எதற்க்கு? எப்படி? என்ற கேள்விகள் எல்லாம் இங்கில்லை. இந்த விளையாட்டு இப்படியே தொடர்ந்தால் கூடிய விரைவில் இது தனிநபர் விளையாட்டாக மாறிவிடும். அப்போது உங்களை "திருமதி ஜெயாலலிதா" என்று சொல்லி கேலி செய்ய கருணாநிதியும் இருக்க மாட்டார். "அம்மா" என்று அழைக்க அடிமட்ட தொண்டனும் இருக்க மாட்டான்.

2 comments:

Indy said...

செல்வி ஜெயலலிதா என்று திருத்தி கொள்ளுங்கள்.

Anonymous said...

ஆமா!
செல்விக்கும் திருமதிக்கும்
நடுவிலே
இன்னா வாத்யாரே இருக்கு ?
அதான் வாத்யார் அம்மான்னும் சொல்லாமே,ஆயான்னும் சொல்லாமே

அம்மு,அம்மு ன்னாரோ!