Saturday, August 23, 2008

ரஜினி, விஜய் பத்திரிக்கைகள் உருவாக்கும் அதி புனைவு


1967 பிறகு தமிழகத்தை ஆட்சி செய்தவர்களில் ஒ.பன்னீர் செல்வத்தை தவிர அனைத்து முதல்வர்களும் சினிமா துறையை சார்ந்தவர்களே. கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் தொடர்ந்து எழுதி
அழுத்துப்போன பத்திரிக்கைகள் 'பாட்சா' படம் வெளியான நாளிலிருந்து ரஜினியை துரத்தி கொண்டிருதன. 'வரும் ஆனா வராது' என்று வடிவேலு பாணியில் இழுத்தடித்து கொண்டிருந்த ரஜினியின் பிம்பம் நெய்வேலியில் நடந்த கர்நாடகத்திற்கு எதிராக குரல் கொடுத்து எடுபடாமல்போன பின்பும் , அதை தொடர்ந்து ஒக்கேனக்கல் பிரச்சனையை லாவகமாக கையாண்டு தாபித்தபின்பு,குசேலன் படத்திற்காக மன்னிப்பு கேட்டபோது சுக்கு தூளாக சிதரிபோனது.

பலரும் ரஜினியை கிழித் தெடுத்தபோது பாலச்சந்தர் மட்டும் 'குரு' என்ற முறையில் ரஜினிக்காக பரிந்து பேசினார். இதை சரியான வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்ட பாரதிராஜாவும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் . உண்மையான தமிழன் எனவும் பாராட்டுப் பத்திரம் வாசித்தார்
.

பின்குறிப்பு :

பாலச்சந்தருக்கு குசேலன் நடித்து கொடுத்ததைப் போன்று , பாரதிராஜாவின் தயாரிப்பில் நடிக்க ரஜினி கால்ஷீட் கொடுத்தால் நன்றிக் கடனாக அமையும் .

இதையெல்லாம் பத்திரிக்கைகள் பேசி ஓய்தாகி விட்டது . அதனால்தான் இளையதளபதி விஜயின் தலையில் அரசியல் மஞ்சத்தண்ணியை
ஊத்து
கிறார்கள் விஜயும் முனைப்பாக ரசிகர் மன்றக் கொடியை அறிமுகப்படுத்தினார்.வணிக பத்திரிக்கைகள் தங்களுக்கு பெருந்தீனி கிடைத்தது என்ற சந்தோஷத்தில விஜயைப் பற்றி எழுதித் குவிக்கின்றன.

இளையதளபதியின் வரலாறு?

இளையதளபதியின் தந்தை சந்திரசேகர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்ப்பட்ட திரைபடங்களில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கற்பழிப்பு காட்சிகளை வைத்து புரட்சி ஏற்படுத்தியவர்.விஜயின் ஆரம்ப காலங்களின் அவரது படத்தை அவரது தந்தை சந்திரசேகரே இயக்கினர்.யுவராணி,சங்கவி ஆகியோர் நனைந்த படி ஆடும் காட்சிகள் இல்லாத விஜய் படங்களும் கவர்சிக்க்காகவே ஓடிக் கொண்டிருந்தன.இன்றும் தெளிவாக சொல்வதானால் விஜய் செக்ஸ் பட நடிகராகவே அறியப்பட்டார். விஜயின் தந்தையே எதிர்பாராத வகையில் விஜயின் வளர்ச்சி இருந்தது. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் வெளிவந்தன இளைய தளபதியாகவும் மாறினார்.கொஞ்சம் கூட சிந்திக்க இயலாத இளைஞர்,இளைஞிகளின் கனவு நாயகனாக மாறினார்.

இந்த உயரத்தை தக்கவைத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்ந்த விஜயும் அவரது தந்தையும் எடுத்த முதல் முடிவு தான் ரசிகர் மன்றக் கொடி.

பூமியின் வெப்பத்தை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.நகரமெங்கும் இலை உதிர்வதைப் போல கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பத்திரிக்கைகள் விஜயை மகாத்மாவாக உருவாக்க முயற்சிகள் மேற் கொள்கின்றன.

பின்குறிப்பு :

விஜயின் 'திருமலை' பட பேனர் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட 'சுரேஷ்' என்பவர். காரைக்குடியில் எனது வீட்டின் அருகே இருந்தவர்.கனவுகளையும்,சுரேஷையும் இழந்த அவனது அம்மா இன்று பள்ளிக்கூட வாசல்களில் மிட்டாய் விற்று பிழைத்து வருகிறார்.

அரசியலும்,ஊடகமும் மக்களின் நம்பிக்கையை இழந்த பின்பும்,அது பாமர மக்களை பெருந்தீனிகளாக மாற்றி விட முயற்சிக்கிறது.

7 comments:

Unknown said...

Saatai adi..... Iniyaavadhu thirundhuvaargala indha muttaal makkal????????

kthiru said...

பின்னிடிங்க ...,

mahesh said...

macha nee periya writer aaiduva da...

sivakumar said...

உள்ளத்தில் உள்ள கோவத்தை நீங்கள் முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. அளவுகோல் எதும் தேவையில்லை. மனதில் தோன்றுவதை அப்படியே எழுதினால் நலம். வாழ்த்துக்கள்.

Balaji's blog said...

Your article sounds insane.If you have guts,then you should have done these stuffs during the days of Pokkiri and Sivaji.Since Kuselan and Kuruvi didn't become blockbusters you people write some ugly stuffs like this.
Regarding movies like Rasigan,well you just go to google and see what sort of videos are watched 'n' number of times and then talk.Its only obscene video that gets the maximum number of hits.Moreover,you people always maintain double standards in your talk.When talking about BO success,you say Poove Unakaga was Vijay's first hit.But when you talk about Vijay's career being enhanced by SAC,you call movies like Rasigan as success.
Well,don't play such cheap gimmicks for mere publicity of your blog.

Thanks and regards,
Bala

ஸ்ரீ said...

Gud one aana makkalum sari pathirikkaigalum sari nadigargalai ennamo CM madhiri treat panradhe velaya pochu. thoo........

Sriram said...

unmaiyin uraikkal......